Wednesday, 16 May 2012

கோடங்கி நாயக்கர்கள்

கோடங்கிகள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்றும் குறி சொல்வதும் நல்ல
நேரம் பார்த்து சொல்வதும் இவர்களில் சிலரது தொழிலாக இருக்கின்றது.  எட்டயபுர
மன்னர்களின் குலதெய்வ வழிபாடு, சடங்குகள் பற்றி  Etaiyapuram Past and Present
இவ்வாறு கூறுகின்றது.




"Though they outwardly profess to be of the Vaishnava faith, their religion
may be described as a kind of fetichism or demonism. Each family has its
household deity or fetish which is instituted by the consecretion of some
relics of departed relatives, more especially, of women who have performed
sati; or of those who have led reputedly chaste and continent lives or have
died virgins, to whom their first prayers and devotions are made, of divine
dispensers of health, happiness, and prosperity.
They never consult a Brahmin for any purpose and are spiritually guided by
Gurus of their own caste, styled Kodangki Nayakans, who have the reputation
of being well versed in astrology and demonology. " (Page 6)
"Saka-Devi is the chief household goddess worshipped by the Kambalatars. She
has no temples, and is represented by no form or image, but is worshipped in
an enclosure fenced in by branches of the Elandai tree (Zizyphus Jujuba)"
(Page 9)




ஜக்கம்மாள் என்றழைக்கப்படும் தெய்வமே எட்டயபுர அரச வம்சத்தினரின் குலதெய்வம்.
எட்டயபுர அரண்மனையின் வாசல் பகுதியில் வலது பக்கத்தில் ஒரு சிறிய ஆலயமும்
இருக்கின்றது. இன்றளவும் இங்கு பூஜை தினமும் நடைபெற்று வருகின்றது.  அதோடு
எட்டயபுர அரச வம்சத்தினர் முருக பக்தர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
கழுகுமலையில் சுப்ரமணிய சுவாமிக்குக் கோயில் கட்டியமை அக்கோயிலின்
பராமரிப்புக்கு அரச வம்சத்தினரால் தொடர்ந்து அளிக்கப்பட்ட கொடைகள் போன்றவை
இதற்குச் சான்று எனலாம். அதோடு அரண்மனை பூஜையறையில் முருக தெய்வத்தின் பல
 படங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகின்றன.



எட்டயபுரத்தில் பாரதியார் இல்லத்திற்கு எதிரே இருக்கும் பெருமாள் கோயில் 28ம்
பட்டமாகிய எட்டயபுர மன்னர் கண்கொடுத்த ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்ப நாயக்கர்
அவர்களால் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த மன்னர் பெயரால்
கடிகைமுத்து புலவர்  சமுத்திரவிலாசப்பிரபந்தம்,  காமரச மஞ்சரிப்பிரபந்தம் ஆகிய
இரண்டு பிரபந்தங்களை இயற்றியிருக்கின்றார். அதனை வம்சமணி தீபிகை இப்படி
கூறுகின்றது.




"மேற்படி பிரபுக்கள் பேரில் கடிகைமுத்துப் புலவரவர்களாற்
சமுத்திரவிலாசப்பிரபந்தமும் காம ரச மஞ்சரிப் பிரபந்தமுஞ் செய்து சபையிற்
பிரசங்கஞ்செய்யப்பட்டதை ஆதரடவுடன் கேட்டு மேல்படி பிரபுக்களாலே உயர்ந்த
சம்மானங்கள் செய்யப்பட்டன. மேற்படி பிரபந்தம் இரண்டுகளில்
சமுத்திரவிலாசப்பிரபந்தமானது சிலேடை யமகம் பாவ புஷ்டிமுதலான குணங்களால் தமிழ்
பண்டிதர்களாலே பிரவுடப்பிரபந்தமாக ஒப்புக் கொள்ளப்பட்டு இச்சென்னைப்
பிரதேசங்களில் இப்பவும்வழங்கிவருகின்றது..." (பக்கம் 38)




எட்டயபுர அரசர்களுக்குக் குருவாக இருந்தவர்கள் கோடங்கி நாயக்கர்கள்
எனப்படுபவர்கள்.  இவர்களும் கம்பளத்து நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர்களே.
சோதிடம், மாந்திரிகம் போன்ற கலைகளில் திறமை மிக்கவர்களாக
இருந்திருக்கின்றார்கள். இந்தக் கோடங்கி நாயக்கர்கள் முன்னிலையில் தான்
திருமண வைபவங்கள்
நிகழ்ந்திருக்கின்றன. திருமணம் மட்டுமல்ல,
இறப்பு சடங்குகள், கிரியைகள் ஆகியற்றோடு ஒரு குருவின்
அனைத்து கடமைகளையும்   நிறைவேற்றுபவர்களாக இவர்கள் இருந்திருக்கின்றனர்.
 


இவர்கள் அக்காலத்தில் அரச குடும்பத்தினரால் மிகவும் உயர்ந்த நிலையில்
ஸ்தானத்தில் வைக்கப்பட்டு சிறப்பு மரியாதைகளுடன் போற்றப்பட்டுள்ளனர்.
முன்னர், கம்பள நாயக்கர்களின் துணைவியர் கணவரை இழக்க நேரிட்டால்
சதி வழக்கத்தில் ஈடுபட்டு தம் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இவ்வகையில் உயிர்
நீத்தவர்கள் இந்த வம்சத்தினரின் ஏனையோரால் குலதெய்வங்களாக வழிபடப்பட்டு
வந்துள்ளனர்.  சதி வழக்கப்படி உயிரை மாய்த்துக் கொள்ளும் பெண்களை தேவதைகளாக
வைத்து அவர்களுக்குக் கோயில் கட்டும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. இவ்வகை
கோயில்களை "தீப்பாஞ்சான் கோயில்" என்று அழைக்கின்றனர்.
எட்டயபுர அரச வம்சத்தினரின் திருமணம் தனித்தன்மை வாய்ந்ததாக
சித்தரிக்கப்படுகின்றது.  திருமண வைபவம் கோடங்கி நாயக்கர்களால் உறுதி
செய்யப்பட்டு முறையாக இவர்களால் அறிவிக்கப்படுமாம். கிராமத்திற்கு
வெளிப்புறத்தில் இரண்டு குடில்கள் அமைத்து அவற்றை அவரைக் கொடி, பொங்கு மரத்தின்
கிளைகளால அழகு செய்வார்களாம்.  இந்தக் குடில்களில் மணமகளும் மணமகனும் இருக்க,
கோடங்கி வருகை புரிந்திருக்கும் விருந்தினர்களையும் உறவினர்களையும் உபசரித்து
வரவேற்பாராம்.  உருமி மேளத்துடன் சீர்வரிசைகள் மணமகள் இல்லத்திற்கு கொண்டு
வரப்படுமாம்.  பின்னர்  கோடங்கி மணமகனிடமிருந்து மஞ்சள் கயிற்றில் இணைக்கப்பட்ட
தங்க பொட்டு ஒன்றை பெற்றுக் கொண்டு அதனை மணமகனின் சகோதரியிடம் கொடுக்க அந்தப்
பொட்டு இணைத்த மஞ்சள் கயிற்றை மணமகனின் சகோதரி மணமகள் கழுத்தில்
கட்டுவார்களாம். இந்த திருமண வைபவம் ஒரு வாரம் தொடர்ந்து விருந்துகள் மற்றும்
உபசரிப்புகளோடு நடைபெறுவது என்பதும் தெரியவருகின்றது.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. 'திராவிட' என்னும் குலப்பெயர் அல்லது வீட்டுப்பெயர் இன்னமும் கடந்த ஆயிரம் ஆண்டுகளா கவே குலோத்துங்க சோழன் கைங்கரி யத்தால் ஆந்திராவில் உள்ளது.

    இது ஒரு பெரிய குழப்பத்தால் சீரமைக்கப்பட்ட கதை.

    இப்போதும் நீங்கள் சென்னைமாநகரில் சில ஆந்திர ஜோசியர்கள் தெருவில் வலம் வரும்போது பார்த்திருப்பீர்கள். காவி வண்ணத்தில் பஞ்சகச்சம் கட்டி மேலே அங்கவஸ்த்திரம் போட்டுக்கொண்டு, நெற்றியில் சந்தன பொட்டு வைத்துக்கொண்டு நம்மைக் கேட்காமலே நமக்கு முதலில் ஜோசியம் கூற ஆரம்பித்து விடுவார்கள். இவர்கள் ஆந்திரப் பழன்குடி மக்க்ளினத்தைச் சார்ந்தவர்கள். கொய்ய அல்லது போயர் இன மக்கள். இந்த போயர் இன மக்கள் ஒரு கால கட்டத்தில் கோதாவரி, கிருஷ்ணா பிராந்தியங்களை ஆண்டு வந்தவர்கள். இவர்களை கீழை சாளுக்கியர்கள் போரில் வென்றதற்கு சரித்திரத்தில் பல ஆதாரங்கள் உண்டு.

    7ஆம் மற்றும் 8ஆம் நூற்றாண்டு காலங்களில் இவர்கள் காசி மற்றும் காஞ்சியில் அந்தணர்களிடம் வேதம் கற்று, தம்மை 'சர்மா' எனும் குலப்பெயர் சேர்த்து அழைத்துக் கொண்டதற்கும் பல சரித்திர ஆதாரங்கள் உள்ளன. இதைப் பற்றி 'தெலுங்கு பல்கலைக் கழகம்' ஒரு புத்தகத்தையே பதிப்பித்துள்ளது. (உ.ம் - மடி போயர் எனும் பழங்குடி அரசன் தன்னை மடி சர்மா என அழைத்துகொண்டான் - இது நான் 'விசித்திரசித்தன்' வரலாற்று நவீனம் எழுதியபோது, ஆய்வு செய்தபோது கிடைத்த் விவரங்கள்).

    ஆனால் போயர்கள்(Boyar)/ (BOYA's) வேதச் சொற்களை நாளடைவில் சரியாக பின்பற்றவில்லை. கோயில் ஆராதனைகள், வேள்வி எழுப்பதலில் ஏகப்பட்ட குழப்பங்கள் நெடுங்காலம் நீடித்ததாக, தெலுங்கு பேராசிரியர் பி.எஸ்.எல்.ஹனுமந்த ராவ் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.
    இந்தக் குழப்பங்கள் பதினோறாம் நூற்றாண்டின் இறுதியில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக காஞ்சி பரமாச்சாரியார் தனது தெய்வத்தின் குரலில் எழுதி இருக்கிறார். மறையோர் வேண்டுகோளின் படி வேதங்களை சுத்தமாகப் பாடவும் வேத முறை வழுவாமல் பயிற்றுவிக்கவும் தமிழகத்திலிருந்து ஆயிரக்காண வேதம் பயின்ற தமிழ் அந்தணர்கள் ஆந்திராவுக்குக் குடியோடு அனுப் பிவைக்கப்பட்டதாகவும், அந்தத் தமிழர்களின் தயவினால் மீண்டும் முறையான் வேத வழி மறுபிறப்பு எடுத்ததாகவும் சரித்திர ஆதாரங்களும், நூல்களும் இங்கு உள்ளன. இங்கு வந்த அந்தத் தமிழ் அந்தணர்கள் தங்கள் குடும்பப் பெயரை 'திராவிட' என அழைத்துக்கொண்டனர்.

    சமீபத்தில் இங்கு (விசாகப்பட்டினம்) ஒரு இலக்கியக் கூட்டத்தில் இப்படி ஒரு திராவிட குடும்பத்தவரை (திராவிட கல்யாணராமா, தெலுங்குப் பண்டிதர்). அவரிடம் இதப் பற்றி சொன்னபோது தங்கள் குடும்பங்களில் இன்னமும் தமிழ் வழக்கத்தில் உள்ளது' எனப் பெருமையுடன் சொன்னார்)

    Reference:

    www.nayaka.in

    ReplyDelete