Wednesday, 16 May 2012

விருப்பாச்சி கோபால நாயக்கர்http://tawp.in/r/2jl9

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
"'கோபால நாயக்கர் "' தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் படை திரட்டி கூட்டமைப்பு செய்து போரிட்ட மன்னர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர். . இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள விருபாக்ஷி என்னும் ஊரினை ஆட்சி செய்த குறுநில மன்னர் .
ஆங்கிலேயரை எதிர்த்து படை திரட்டி புரட்சி செய்த காரணத்தால் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1800, இல் இவர் தூக்கில் இடபட்டார்.. இவரது நினைவாலயம் விருபாக்ஷி பகுதியில் அமைந்துள்ளது.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] வாழ்கை குறிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி க்கு பக்கத்தில் உள்ள விருபாக்ஷி என்னும் ஊரில் கி.பி.1765 இல் ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்த்த வீரையா நாயக்கருக்கும் , காமாட்சி அம்மாளுக்கும் மகனாக பிறக்கிறார் திருமலை கோபால சின்னப்பா நாயக்கர் . விசுவநாத நாயக்கர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பாளையபட்டுகளில் விருபாக்ஷயும் ஒன்று , 19 வது பாளையக்காரராக இவர் ஆட்சிக்கு வருகிறார் .

[தொகு] கூட்டமைப்பு

திப்பு சுல்தான் படைத் துணையுடன் கோபாலநாயக்கர் கண்காணிப்பில் புரட்சிக்காரர்கள் ஆங்கில முகாம்களில் பாய்ந்து ஆயுதங்களையும் சேமிப்பு பண்டங்களையும் பறித்தனர். விருப்பாட்சி பாளையக்காரராக விளங்கியவர் கோபால நாயக்கர். மருதபாண்டியருடனும் அண்டை தேசத்து துண்டாசியுடனும் தொடர்பு கொண்டு ஒரு விரிவான கூட்டமைப்புடன் தென்னக கூட்டினை உருவாக்கினார். மருதபாண்டியன் தலைமையில் இராமநாதபுரம் சீமையானது. கோபால நாயக்கர் தலைமையில் திண்டுக்கல்லும் கூட்டிணைவுகளுடன் சேர்ந்து வலுப்பெற்றன. கன்னட தேசத்தில் தூண்டாசியும் கிருட்டிணப்ப நாயக்கரும், மலபாரில் கேரளவர்மனும் புரட்சித்தலைவர்களாக உருவாகி கூட்டிணைப்பு மூலம் ஆங்கிலேயரை எதிர்த்தனர். கோயம்புத்தூரிலும் சேலத்திலும் தேபக்தர்கள் இயங்கினர். ஈரோட்டு மூதார் சின்னனும், கானி சாகனும் தலைவர்களாகத் திகழ்ந்தார்கள். மணப்பாறை லக்ஷ்மி நாயக்கரும் , தேவதானப்பட்டி பூசாரி நாயக்கரும் தனது போர் வீரர்களை கோபால நாயக்கருக்கு கொடுத்து உதவி வந்து உள்ளனர் . பழனியில் இத்தலைவர்களின் தூதர்கள் கோபால நாயக்கர் தலைமையில் கூடிப் பேசினார்கள். விருப்பாட்சியில் தெற்கத்திச் சீமையின் சுமார் 3000 கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி வெள்ளையர்களை விரட்டுவதற்குச் சபதம் எடுத்தார்கள். இந்த அறைகூவல் கிராமங்கள் தோறும் பனையோலை மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. தீபகற்பக் கூட்டிணைவு உருவாகியது. மக்கள் திரள் பங்கேற்ற முதல் சுதந்திரப்போர் தொடங்கியது!

[தொகு] ஆங்கிலேயரை எதிர்த்தார்

சுதந்திர போராட்ட வீரரும், விருப்பாச்சி குறுநில மன்னருமான கோபாலநாயக்கர் என அழைக்கப்பட்ட திருமலை கோபால சின்னப்ப நாயக்கர் விருப்பாச்சி பாளையப்பட்டை 19வது பாளையக்காரராக ஆட்சி புரிந்து வந்தார். இவர் ஆட்சிக் காலத்தில், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார். ராணி வேலுநாச்சியாருக்கும், ஊமைத்துரைக்கும் அடைக்கலம் கொடுத்ததால் வெள்ளையர்கள், கோபால நாயக்கர் மீது ஆத்திரம் அடைந்தனர். இந்நிலையில், கி.பி.1800ல் வெள்ளையர்களை எதிர்த்து ஒரு அணி திரட்டி கோவை மீது படையெடுத்துச் சென்றார். இப்போரில் வெள்ளையர்கள், விருப்பாச்சி நாயக்கரை கைது செய்து தூக்கிலிட்டனர். இவரது அரண்மனையையும் தரைமட்டமாக்கினர்.அவருடன் அவரின் மகன் முத்து வெள்ளையா நாயக்கரும் தூக்கில் இடபட்டார் . இவருடன் இவரின் படையில் இருந்த பலரும் ஆங்கிலேயரின் துப்பாக்கி சூட்டில் மாண்டனர் .

[தொகு] கள ஆய்வு

கோபால நாயக்கர் வாழ்ந்த விருப்பாச்சி பகுதியில் அரசின் சார்பில் கள ஆய்வு மேற்கொண்டு, அரண்மனை வளாக அமைவிடம் கண்டறியப்பட்டது. கள ஆய்வில் அரண்மனையின் எச்சங்கள், ஐந்து ஏக்கர் பரப்பளவில் பரவிக் கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், கோவிலின் சிதிலங்கள், பயன்படுத்திய மண் பாண்டங்கள், பீங்கான்கள், கண்ணாடியால் ஆன பொருட்கள் ஆய்வில் சேகரிக்கப்பட்டன. இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்ததற்கான தடயங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த ஆயுதங்களை வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்பது கள ஆய்வின் மூலம் அறியப்படுகிறது.

[தொகு] நினைவிடம்

ஆங்கிலேயர்களை எதிர்க்க திண்டுக்கலில் இருந்து கூட்டமைப்பு திரட்டி , ராணி வேலுநாசியார்க்கும், ஊமைதுரைக்கும் போராட்ட காலத்தில் உதவி வந்தும் படை வீரர்களை அவர்களுக்கு கொடுத்து உதவியும் , கேரளா வர்மா , துன்டூஜி , திப்பு சுல்தான் என்று பலரிடமும் இணக்கத்தோடு இருந்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் பாடுபட்ட திருமலை கோபால சின்னப்பா நாயக்கருக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டி உள்ளனர் .திண்டுக்கல் - பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மணிமண்டபம் 69 லட்சம் செலவில் 242 ச.கி.மி. பரபளவில் அரசு அமைத்துள்ளது

No comments:

Post a Comment