ராஜகம்பளத்து நாயக்கர்கள் வணங்கும் கோவில்கள்
குறைவிலாதருளும் குச்சனூர் பகவான்

அழகான செழிப்பான தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது.
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T3_705.jpg)
இந்துமத
வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும்,
சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு
எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில்
கொண்டு எழுந்தருளியிருக்கும் இடம் குச்சனூர்தான்.
![[kuchanur.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi34LGOwt_tUgjLPP1G56_NIkKfd6Hh4MHBRvqlXJlcPrH3W-A9keRPCKQogf7HHWQFJjzoMdviM_NvWmgQ8qvoRX-ThcPIuC6rrDAlgmvX_oVvjeQBcIC2HvzIIGLMZueM7JbHBnygLT8I/s400/kuchanur.jpg)
சனி தோசம்
உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால்
அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும்.
மேலும் தாங்கள் துவங்கும் புதிய தொழில்கள் வளர்ச்சி அடையவும், வணிகங்கள்
பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து
வணங்கிச் செல்கின்றனர்.

தற்போது
இந்தியாவின் பிற பகுதிகளிலிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், நேபாளம்
போன்ற வெளிநாட்டிலிருந்தும் இந்துமத நம்பிக்கையுடையவர்கள் இந்த சனீஸ்வர
பகவான் கோவிலுக்கு வந்து தங்கள் குறைகள் தீர்ந்திட வேண்டிச் சென்று
கொண்டிருக்கின்றனர்.
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மனைவி மைத்ரேயா அங்கு
எருமைக் கன்றுடன் கோவிலை 19 முறை வலம் வந்து, அதை தானமாக வழங்கினார்.
பின்னர், 19 வகையான விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்தார். பின்,
கோவிலில் நடந்த உச்சிகால பூஜையில் கலந்து கொண்டார்.

தல வரலாறு
இப்பகுதியை
சேர்ந்த தினகரன் எனும் மன்னன் ஒருவன் குழந்தையின்றி மனம் வாடிவந்த
நிலையில் தனக்குக் குழந்தை ஒன்று அளிக்கக் கோரி தினமும் இறைவனிடம் வேண்டி
வந்தான். இப்படி அவன் வேண்டிக் கொண்டிருந்த போது ஒருநாள் அசரீரி ஒன்று
கேட்டது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன்
வருவான் என்றும் அவனை வளர்த்து வர வேண்டும் என்றும் அதன் பின்பு அவனுக்கு
ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. அந்த அசரீரியில் கூறப்பட்டபடி
சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் வந்தான். அந்த மன்னனும் அந்த
சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். அதன்
பின்பு அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மன்னனும், அரசியும் அந்தக்
குழந்தைக்கு சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். இரண்டு குழந்தைகளும்
வளர்ந்து பெரியவர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன்
இருந்தான். மன்னனும் அவனுடைய அறிவுத்திறனுக்கு அவனை மன்னனாக்குவதே சரி
என்கிற எண்ணத்துடன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனுக்கே
முடிசூட்டினான்.
இந்நிலையில்
மன்னன் தினகரனுக்கு சனி தோசம் பிடித்தது. சனி தோசத்தால் தினகரன் பல
சோதனைகளுக்கு ஆளானான். மிகவும் துன்பமடைந்தான். தன்னை வளர்த்து
மன்னனாகவும் ஆக்கிய தனது வளர்ப்புத் தந்தை அடையும் துன்பத்தைக் கண்டு
மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால் சனியின்
உருவத்தைப் படைத்து தனது தந்தைக்கு வரும் துன்பத்தை நீக்க வேண்டி வழிபடத்
துவங்கினான்.
இவனது
வழிபாட்டில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றினார். அவர்,
"முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப இந்தப் பிறவியில் சனி தோசம்
பிடிக்கிறது. அவர்களுடைய பாவ வினைகளுக்கேற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள்,
ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல
துன்பங்கள் வருகின்றன. இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், தங்கள்
கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு அவர்களது நற்செயலுக்கேற்ப
இறுதியில் நன்மையும் அளிக்கப்படும். உன் தந்தையின் முற்பிறவி பாவ
வினைகளுக்குத் தகுந்தபடி அவருக்குத் துன்பங்கள் வருகின்றன." என்றார்.
சந்திரவதனன்
அனாதையாக அந்த வீட்டிற்கு வந்த தன்னை வளர்த்ததுடன் வளர்ப்பு மகனான தன்னை
இந்த நாட்டின் மன்னனாகவும் ஆக்கிய அவருக்குக் கொடுக்கும் துனபங்களைத்
தனக்கு அளித்து அவருடைய துன்பத்தைக் குறைக்கும்படி வேண்டினான். அவனுடைய
வேண்டுதலில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை
ஏழரை நாழிகைக் காலம் சனி தோசம் பிடிக்கும் என்றும் அந்த ஏழரை நாழிகைக்
காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம்
அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் அதற்கு
சம்மதித்தான்.
சனீஸ்வர
பகவானும் அதற்கு ஒப்புக் கொண்டு ஏழரை நாழிகை காலத்திற்கு
சந்திரவதனனுக்குக் கடுமையான பல துன்பங்களைக் கொடுத்தார். அத்
துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதனனின் முன் மீண்டும் தோன்றிய
சனீஸ்வர பகவான் "இந்த ஏழரை நாழிகை கால சனிதோசம் கூட உன் முற்பிறவியின்
வினைகளுக்கேற்ப உனக்கு வந்தது. தங்கள் குறைகளை உணர்ந்து இவ்விடத்திற்கு
வந்து என்னை வணங்கும் எவருக்கும் சனி தோசத்தால் வரும் துன்பங்களைக்
குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன்" என்று சொல்லி மறைந்தார். பின்பு
அந்த இடத்தில் சுயம்புவாகத் தோன்றினார்.
சுயம்பு
வடிவிலான சனீஸ்வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சந்திரவதனன் தன்னுடைய
வழிபாடு, சனி தோசம் பிடித்து அதனால் துன்பப்படும் பிறருக்கும்
வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், அந்த செண்பகநல்லூரில்
சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற்குக் குச்சுப்புல்லினால் கூரை அமைத்து
வழிபாட்டுத் தலமாக்கினான். இதன்பிறகு இந்த செண்பகநல்லூர் குச்சனூர் என்று
ஆகிவிட்டது. "தினகரன் மான்மியம்" என்கிற பெயரில் வெளியான பழமையான நூலில் இந்த தலத்திற்கான வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
![[sani.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjg0RdNpQqIB58Dnah0uk3CVhlrWDvNDKDbRXk0d5Dmg8Fp42eW4pGmJjjY9fkkkiRy-YVdh6YVIvy2-YB7Up4MtsTKSeqOnmV4RVJC845XB6WkaZLAUFnX4eFQWagonE-IVcWzGXQkI0vx/s1600/sani.jpg)
வழிபாடுகளும் சிறப்புகளும்
சுயம்புவாக
இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் "விடத்தை மரம்" தல மரமாகவும்,
"கருங்குவளை மலர்" தல மலராகவும், "வன்னி இலை" தல இலையாகவும் உள்ளது.
சனீஸ்வர பகவானுக்கு "காகம்" வாகனமாகவும், "எள்" தானியமாகவும் இருக்கிறது.
இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன்
காகத்திற்கும் அன்னமிட்டு வழிபடுகின்றனர்.
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T1_705.jpg)
அரூபி
வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக்
கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இந்த
தலம் சனிஸ்வர பகவானுக்கு பிரம்மஹத்தி தோசம் பிடித்து நீங்கிய வரலாற்றுத்
தலம் என்றும் கூறப்படுகிறது.
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T9_705.jpg)
குச்சனூர்
அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு
வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு
ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் "ஆடிப் பெருந்திருவிழா" என்கிற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் "சனிப்பெயர்ச்சித் திருவிழா"
சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாக்களின் போது தமிழகம் மற்றும் பிற
மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள்
குறைகளைத் தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.
இக்கோவிலில் துணைத் தெய்வங்களாக அருள்மிகு சோணைக் கருப்பண சுவாமி, அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்.

தேனி
மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயில் வளாகத்தில்
வலது புறத்தில் சோணை கருப்பணசுவாமி காவல் தெய்வமாக உள்ளதால் அதற்கு ஒரு
நாள் தனி திருவிழாவே நடத்தப்படுகிறது. கோயிலில் 8 அடி உயரத்தில் குதிரை மேல் கருப்பசாமி அரிவாளுடன் அமர்ந்திருக்கும் சிலை உள்ளது. இந்த சிலைக்கு கீழ் 5
அங்குல சுற்றளவுள்ள ஒரு ஓட்டை உள்ளது. பக்தர்கள் வழங்கும் மது இதில்
ஊற்றப்படும். ஆண்டு தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பிலும் குறிப்பிட்ட
அளவு (100 குவாட்டர்) மது வாங்கப்படும்.

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பூலாநந்தபுரம் ராஜகம்பள மாறைய நாயக்கர் உறவின் முறையால் கொடிக்கம்பத்திற்கு
நீர் ஊற்றப்பட்ட பின், காலை காக்கை சகுனம் பார்த்து கொடியேற்றத்துடன்
விழா துவங்கி சனிக்கிழமைகளில் விழா நடக்கும். சிறப்பு பூஜை,
திருக்கல்யாணம், மூன்றாவது சனி வாரம் ஆடி பெருத்திருவிழா
கொண்டாடப்படும். சிறப்பு பூஜை, சுவாமி புறப்பாடு, லாட சித்தர் பீடத்தில்
பூஜை, முளைப்பாரி, கரகம் கலக்குதல், மஞ்சள் நீராட்டம்,
சோனைக்கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்தல், கொடியிறக்கி பகவானுக்கு விசேஷ
பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கும். ராஜகம்பளம் மக்களுக்கு கோவில்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களே கோவிலில் முதலில் பூஜை செய்வர் .

சனிபகவானுக்கு
பிரம்மஹத்தி தோஷம் பிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம். சனிபகவான்
சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு
வழிபடுதல் மிகவும் சிறப்பு.

![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T5_705.jpg)

![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T7_705.jpg)
பயண வசதி
தேனி நகரிலிருந்து 23 கிலோ
மீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் குச்சனூர் ஊருக்கு தேனியிலிருந்து
குறிப்பிட்ட நேரங்களில் நகரப் பேருந்து வசதி இருக்கிறது. திருவிழாக்களின்
போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தினால் சிறப்புப்
பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
தெரிந்த ஊர் தெரியாத செய்தி -2 விசாக பட்டிணம்
ReplyDeleteபோ(B)னி அமரேஸ்வரர் கோயில்
வழங்கியவர்: மரபூர் ஜெய.சந்திரசேகரன,
சரி, தெரிந்த ஊர்- விசாகபட்டிணம். தெரியாத செய்தி? அருகே, அனந்தபூர் பூ மார்க்கெட் என்றழைக்கப்படும் இடத்திலிருந்து, சிறிய மண் பாதை ஒன்று பிரிந்து பத்மநாபம் எனும் சிற்றூரை நோக்கி போகிறது. வழியிலேயே வரும், கோஸ்தானி (கோ- பசுமாடு, ஸ்தனம் - மடி) கோஸ்தானி நதி என்பதால் நீர் பால் போல் சுவையாய் இருக்கும் என்றரிந்தோம். வெள்ளையர் காலத்திலேயே நீர் வளத்தைக் கண்டறிந்து அங்கிருந்தே எல்லா இடங்களுக்கும் நீறேற்றி அறை அமைத்து நீர் விநியோகம் செய்கிறார்கள்.
அந்த கோஸ்தானி அருகிலேயே, வெள்ளை உடையுடுத்தி இருக்கிறது, அழகான அமரேஸ்வரர் கோயில்.
Image:14v.jpg
உள்ளே உள்ள சிவலிங்கத்தின் ஈர்ப்பு அபரிதமானது.
திவாகர் சாரும் அவரது அருமை மகளும் சரியாக பூஜை ஆரம்பிக்கும் முன்பு வந்தனர். தெலுங்கு கல்வெட்டுகள் தூண்களிலும், மேல் விதானத்திலும் காணப்பட்டன. ஒரிய கோயில் கட்டுமான முறையில், கோஷ்டங்களில் முறையே விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் வெள்ளையுடையணிந்தமையால் மர்ம பிசாசுகள்(???) போல் காட்சியளித்தனர்.
வாயிலில் இரு புறமும் இரண்டு அதிசயங்கள் எங்களை வரவேற்றன. அருமையான பிக்ஷாடனர் சிலையும், லெஷ்மி நாராயணர் சிலையும். அதிலும், பிக்ஷாடன மூர்த்தியின் கீழே நிற்கும் தாருகா முனியின் உடல் மான் போலவும், முகம் மனித முகமாகவும் செதுக்கப்பட்டிருந்தது. லெக்ஷ்மிநாராயணரோ, அதீத அழகு. அதில், நாராயணரின் பாதாரவிந்தங்களை சரணடைந்த மன்னன், தான் மட்டும் அல்லாது, தன் மனைவிமார்கள், பட்டத்து யானை உட்பட சகல பரிவாரங்களோடும் நாராயணனே நமக்கே பரை தருவான் என்று வணங்கி நிற்கும் சிலை மிக அருமை.
லக்ஷ்மி நாராயணர்
பிக்ஷாடனர் மாலின் காலில் மன்னர் மற்றும் அரசகுடும்பத்தினர்
நான் வெள்ளையுடையணிந்து, வெள்ளையுடை அணிந்து என்று அடிக்கடி சொல்வது எதைத் தெரியுமா? சுண்ணாம்பு அடித்திருப்பதை. மலிவோ அல்லது தானமாக வந்ததா, தெரியவில்லை.அப்படி அடி அன்றால் அடி! உள்ளிருக்கும் சிலைகளின் நுணுக்கமான அழகோ, வேலைப்படுகளோ, பொதிந்து போகும்படியான சுண்ணாம்பு, சுமார் 1 இன்ச் அளவிற்கு படிந்துள்ளது, கோயில் முழுதும்! வாசலில் நாம் கண்ட கிடைப்பதற்கரிய சிலைகளைக் கழுவிச் சுத்தம் செய்ததில் ஊர் மக்களே, சிலைகளைப் பற்றி விவரித்ததும் அதிசயித்துப் போனார்கள்! தெரியாமல் செய்து விட்டோம், இனி சுண்ணாம்பு அடிக்க மாட்டோம் என்று சத்தியம் வாங்கிக் கொண்டோம்.
திவாகர் அருமையாக் கோஷ்ட தேவதைகள், ‘கஷ்ட' தேவதைகளாக சிரமப் படுகிறார்கள் என்றும், அந்தந்த திசைகளைப் பார்த்து அமரும் தேவதைகளின் பார்வை நம் மேல் பட்டால் எத்தனை நன்மைகள் என்பதையும் சுந்தரத் தெலுங்கினில் விவரித்ததும், மகுடிக்கு கட்டுண்ட பாம்பு போல், மக்கள் ஆமோதித்தனர். அவரது மகளும், வாயிலில் நான் சொன்ன சிலைகளை சுத்தம் செய்வதில் தன்னார்வத்தோடு பங்கு கொண்டார்.
கோஷ்ட தேவதைகளைப் பற்றிய விளக்கம் த்ருகிறார் திவாகர்
போய ராஜாக்கள் கட்டியதாகத் தெரிகிறது, இக்கோயில். நாக அரசர்கள் மிகவும் போற்றி வணங்கியதாகவும் இருந்துள்ளது. போயர்களின் அரசாட்சி காலம் 8ஆம் நூற்றாண்டு. மீண்டும் 1533 ஆம் ஆண்டு கிருஷ்ண தேவராயரின் மாமனார் ப்ரதாப ருத்கஜபதி வம்சத்திடமிருந்து அரசை மீட்ட போயர்கள், மிகவும் நன்கு அரசாட்சி செய்தனர். 8ஆம் நூற்றாண்டின் போது அவர்கள் அரசாண்டபோது பொம்மக்கர வம்சம் என்றே பெயர் இருந்தது. அவர்களது முதல் அரசி, சோழ வம்சத்தைச் சேர்ந்தவர்! (திருபுவன மஹாதேவி) . அவர் நந்திவர்மன் III ஆம் மன்னனின் , பிரதானியான ராஜ மல்ல தேவராயன் என்பவரின் மகள்! இக்கோயிலில் உள்ள கல்வெட்டில் ஓரிடத்தில் கிருபாள போயா என்ற பெயர் காணப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த போயர்கள், தங்கள் முன்னோர்கள் பெயரை கல்வெட்டாக பொறித்தார்கள் என யூகிக்கலாம்.
கற்தூண்களில் கல்வெட்டுக்கள்
வெங்கட்ரமண ராவும் அவர்தம் மைந்தர் வெங்கடேஸ்வருலுவும் எப்பாடுபட்டேனும் கோயிலைப் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்றனர். திவாகரின் கூற்றுப்படி, அமராவதிக் கரையில் உள்ள அமரேஸ்வரர் கோயிலுக்கும் இந்த கோஸ்தானி கரையிலுள்ள ஈஸ்வரர் கோயிலுக்கும் சம்பந்தம் உண்டு என்ற செய்தியும் குறிப்பிடத் தக்கது. திவாகரிடமிருந்து இன்னுமொரு புதிய வரலாற்றுப் புதினத்தை எதிர் பார்க்கலாம்! கோயிலை பழைய நிலைக்கு மீட்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் வெங்கடேஸ்வருலு. 10000 லிட்டர் ஆஸிட் வரவழையுங்கள் என்றேன்! நிஜமாகத்தான். அத்தனை சுண்ணம்பையும் ஆசிட் ஊற்றி சுரண்டி எடுத்தால்தான் உள்ளே உள்ள சிலைகள், பிம்பங்கள், வேலைப்படுகள் தெரிய வரும். அது முடிந்த பின், மேற் கூறையின் கசிவுக்கான காரணத்தை அறிந்து அதை சரி செய்வோம் என்றேன்.
தெலுங்கில் ஊர் மற்றும் கோவில் பெயர்
Reference:
www.nayaka.in