சேவையாட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னிந்தியாவில் வழங்கும் ஒரு நாட்டார் ஆடல் வடிவம் சேவையாட்டம். கம்பளத்துநாயக்கரால்
ஆடப்படும் ஆட்டம் சேவையாட்டம் ஆகும்.சேவை என்றால் சேவித்தல், வணங்குதல்
என்று பொருள்படும்.இறைவனை ஆட்டத்தின் மூலமாக வணங்குவதால் இது
சேவையாட்டம்எனப்பட்டது. இராமாயணக் கதையைப் பாடலாகப் பாடிக்கொண்டுவிடியவிடிய
இவ்ஆட்டம் ஆடப்படும். தேவதுந்தமி, சேவைப் பலகை,சேமக்கலம் ஆகிய
இசைக்கருவிகள் ஆட்டத்தின் போதுபயன்படுத்தப் படும். சேவையாட்டக் கோமாளி
பாடலைப்பாடி ஆட்டத்தைத் தொடங்க, ஏனைய ஆட்டக்காரர்கள்
பின்பாட்டுப்பாடிவட்டமாக ஆடி வருவர். திருமால், பெருமாள், ரெங்கநாதர்ஆகிய
தெய்வங்களின் வழிபாட்டில் சேவையாட்டம் தவறாது இடம்பெறுகிறது. [[1]]
பெருமாள் கோவில்
தென் தமிழகம் மற்றும் கொங்கு நாடு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் இவ்வாட்டம் நடைபெறும் . சங்ககால நூல்களில் குறிப்பிடும் பிந்தேறு குருவை எனப்படும் ஆட்டதுக்கு சமமானதாக கருதபடுகிறது . தேவராட்டம் ஆடும் மக்கள் கடைசியாக இந்த சேவையாட்டம் ஆடுவார்கள் .இந்த ஆட்டத்தை ஆடுவதன் மூலம் தேவராட்டம் முழுமை பெறுகிறது என்பதை அறியலாம் .
No comments:
Post a Comment