Wednesday, 16 May 2012

கம்பளத்து நாயக்கர்களுக்கும் பிற நாயக்கர்களுக்கும் உள்ள வேறுபாடுகள் :

கட்டுப்பாடு :
சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் கொலை செய்துவிடும் பழக்கம் இன்றும் உள்ளது , அல்லது அவர்களை ஊரை விட்டே ஒதுக்கிவிடுவது . சாதி மாறி கலப்பு திருமணம் மிக குறைவாக உள்ள சமுகத்தில் முதல் இடத்தில உள்ளது ராஜ கம்பளத்தார் இனத்தவர்கள் .
பிற நாயக்கர்களிடம் இவ்வாறான தீவிர கட்டுப்பாடு இல்லை என்பதால் பிற இன மக்களுடன் அதிகமாக கலக்கின்றனர் . 


சாதி பாசம் :
ராஜகம்பளம் இனத்தவர்கள் சாதியை அதிகம் நுகரும் பழக்கம் கொண்டவர்கள் , எதிலும் சாதியை பற்றி தீவிரமாக பேசும் வழக்கம் கொண்டவர்கள் , பிற நாயக்கர்களிடம் இவ்வாறான சாதி பாசம் காண்பது அறிது.


பண ஆசை :
பிற நாயக்கர்கள் பணம் சம்பாதிப்பதில் அதிகம் நாட்டம் கொண்டவர்கள் , ஆனால் கம்பளத்து நாயக்கர்களுக்கு ராஜாவாக இருந்த காலம் முதல் இன்று வரை பணம் சம்பாதிக்கும் ஆசை அதிகம் இருந்தது இல்லை . சொத்து சண்டைகள் குறைவாக உள்ள சமூகமாக உள்ள இனத்தவர்கள் .


முரட்டு தனம் :
நாயக்கர்கள் என்றாலே முரடர்கள் என்பதே ராஜகம்பளம் இனத்தை கண்டவுடன் தான் இருந்தது  இருந்து வருகின்றனது , 


பெயரெல்லாம் பொம்மன் திம்மன் 
ஊரெல்ல்லாம் பட்டி தொட்டி 
வீரத்தில் கம்பளத்து வடுகர் கூட்டம் 
பெண்களோ அதிலும் காட்டம் 


என்ற பாடல்கள் மூலம் நாயக்கர்களிலேயே அன்று முதல் இன்று வரை வீரம் நிறைந்தவர்களாக உள்ளவர்கள் ராஜகம்பளம் இனத்தவர்கள் , பிற நாயக்கர்கள் விவசாயம் , தொழில் போன்றவற்றில் நாட்டம் கொண்டவர்கள் ஆனால் கம்பளத்தார்கள் போர் , அரசு போன்றவற்றிலேயே நாட்டம் கொண்டவர்கள் .


பிள்ளை பெற்றுகொள்ளுதல்:
பிற நாயக்கர்கள் காட்டிலும் ராஜகம்பளம் இனத்தவர்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள் 


கல்வியில் :
ஆங்கிலேயர் காலத்தில் கட்டுகுத்தகை என்ற முறையில் ஆங்கிலேயருக்கு அடிபணித்து , தொழில் செய்தவர்கள் பிற இன மக்கள் , ஆங்கிலேயனை எதிர்த்து அவனது கல்வியை படிக்க கூடாது என்று பல வருடங்கள் இருந்து இன்று வரை செய்வது அறியாமல் இருப்பவர்கள் கம்பளத்தார்கள் .

ஆயக்குடி பாளையம்

 திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு கிழக்கில் இருக்கும் இவ்வூர் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்து வந்தது . இப்பாளையத்தை ஆட்சி செய்தவர்கள்ராஜகம்பளம் என்று அழைக்கப்படும் நாயக்கர் இனத்தின் உட்பிரிவினை சேர்ந்தவர்கள் . இவர்கள் பல கிராமங்களை உருவாக்கி உள்ளனர் மேலும் தங்களை தீவிர வைனவர்களாய் காட்டிக்கொள்ள அகோபிள நாயக்கர் என்றும் அழைத்துக்கொள்கின்றனர் .

பொருளடக்கம்

  [மறை

[தொகு]பாளைய வரலாறு

இப்பாளையத்தின் வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆந்திர பகுதியில் அரசாட்சி செய்தவர்கள் . இசுலாமிய மன்னனான பாதுசா , நாயக்கர் வீட்டு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள விரும்பியதாகவும் . பெண் கொடுக்க மனம் இல்லாமல் நாயக்கர் வம்சாவளியினர் இடம்பெயர்ந்து ஆணைகொண்டி தேசத்தில் இருந்த விஜயநகரம்பகுதிக்கு செல்கின்றனர் . இதனை கேள்விப்பட்ட விஜயநகர மன்னர் அச்சுத தேவராயர் இந்த நாயக்கர்களை தம்முடைய படையில் சேர்த்து பல வெகுமதிகளை தந்துள்ளார் . இவர்கள் அகோபளம் என்ற ஊரில் இருந்து வந்தனர் . இவர்கள் பிறகு தெற்கு நோக்கி நகர்ந்து ஆயக்குடி பகுதியில் பலர் குடியேறினர் .

[தொகு]பெரிய ஒபயகொண்ட நாயக்கர்

முதலாவதாக இந்த பாளையத்தை உருவாக்கியவர் பெரிய ஒபய கொண்ட நாயக்கர் , இவர்கள் அகோபிளம் என்ற ஊரில் இருந்து வந்ததால் தங்களை அகோபளியர் என்று அழைத்துக்கொள்கின்றனர் . இவர் மகன் ஒபய கொண்டாம நாயக்கர் அகோபளிசுவரர் பெருமாள் கோவில் கட்டினார் , குட்டப்பள்ளம் , பெரும் பள்ளம் , கவுஞ்சி ஆகிய ஊர்களை உருவாகினர் . இவரது மகன் கொண்ட நாயக்கர் ஒபுளாபுரம் என்ற ஊரினை அமைத்து அங்கு கோட்டை ஒன்றையும் கட்டினார் , ஐந்தாவதாக பட்டம் ஏற்ற குமாரக் கொண்டாம நாயக்கர் புது ஆயக்குடி என்ற ஊரினை உருவாக்கி அங்கு விறுகுளம் என்ற குளத்தினை வெட்டி உள்ளார் ,

[தொகு]விவசாயத்தை பெருக்கினர்

6 வது பட்டக்காரர் முத்து கொண்டாம நாயக்கர் பெரிய குளம், நடுக்குளம் என்ற குளங்களை வெட்டி தண்ணீர் வருவதற்காக வருதாபடி மாற்றில் அணை ஒன்றை கட்டினார். 7 அவது பட்டக்காரர் பகடல் கொண்டாம நாயக்கர் மேலக்கோட்டை என்ற கோட்டையை அமைத்து ஊர்களை கோட்டையை சுற்றி அமைத்தார் . குமார நாயக்கர் குளம் ஒன்றையும் அமைத்தார் . 8 வது மன்னர் ஒபுள கொண்டாம நாயக்கர் எர்ரம் நாயக்கர் பட்டி , கஞ்ச நாயக்கர் பட்டி , உருகுவார் பட்டி , கரிசல்குளம் போன்ற ஊர்களை உருவாக்கினார் , 9 வது பட்டம் பெற்றவர் ஏற்ர கொண்டாம நாயக்கர் பொட்டம்பட்டி கிராமத்தையும் , ஆயக்குடி சேர்ந்த தேவ நாயக்கர் குளம் ஒன்றையும் அமைத்துள்ளார் , 10 வது பட்டதரான முத்தியாலு கொண்டாம நாயக்கர் கணக்கம் பட்டி கிராமத்தையும் , பட்டிகுளம், மாப்ளை நாயக்கர் குளம் முதலியவற்றை அமைத்துள்ளார் , 11 வது அரசர் கொண்டாம நாயக்கர் சித்த வலசை மற்றும் 18 கிராமங்களை உருவாக்கினார் . 12 வது குமார் கொண்டாம நாயக்கர் கோம்பை பட்டி ஊரினையும் , ஊமை குமார சேர்வைகார குளம் , செவ்வப்ப நாயக்கர் குளம் முதலியவற்றை உருவாக்கினார் , 13 வது பட்டர் கொண்டாம நாயக்கர் சேர்வை காடுகளை வெட்டி விளை நிலங்களாக பல ஊர்களை உருவாக்கினார் .

[தொகு]போரில் பங்கு கொள்ளல்

14 வது குமார கொண்டாம நாயக்கர் பாப்பன் குளம் வாய்கால் அமைத்ததோடு அக்ரகாரம் முதலியவற்றை அமைத்து பிராமணர்களை , பண்டாரங்களை குடி அமர்த்தி உள்ளார் . ஏழை பிராமணர்களுக்கு பல தானங்களை தந்துள்ளார் , பெருமாள் குளம் , பசளை நாயக்கர் பட்டி முதலிய கிராமங்களையும் உருவாக்கி உள்ளார் , இவரது காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சிக்காலம் . மைசூர் படைக்கு எதிராக நடைபெற்ற மூக்கருப்பு போரில் ஆயக்குடி பாளையமும் மதுரை நாயக்கர்களுக்கு உதவி உள்ளது , தஞ்சைக்கு எதிரான மதுரை நாயக்கர் போரிலும் பங்கு கொண்டுள்ளது , 15 வது கருத்த கொண்டாம நாயக்கர் வெப்பம் வலசை , செல்லப்பக் கவுண்டன் வலசை கிராமங்களை உருவாக்கி உள்ளார் , 16 வது பட்டதரசர் குமார கொண்டாம நாயக்கர் வேட்டை ஆடுவதில் வல்லவர் , 17 வது ஒபுள கொண்டாம நாயக்கர் இவரது காலத்தில் பல்லாயிரம் வீரர்களை விருப்பாச்சி கோபால நாயக்கர் படைக்கு தந்து உள்ளார் , கோபால நாயக்கரும் இவரும் உறவினர்கள் . ஆங்கிலேயரை எதிர்த்து வந்ததால் இப்பாளையம் அழிக்கப்பட்டது.

[தொகு]மேற்கோள்கள்

  • திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி

சேவையாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தென்னிந்தியாவில் வழங்கும் ஒரு நாட்டார் ஆடல் வடிவம் சேவையாட்டம். கம்பளத்துநாயக்கரால் ஆடப்படும் ஆட்டம் சேவையாட்டம் ஆகும்.சேவை என்றால் சேவித்தல், வணங்குதல் என்று பொருள்படும்.இறைவனை ஆட்டத்தின் மூலமாக வணங்குவதால் இது சேவையாட்டம்எனப்பட்டது. இராமாயணக் கதையைப் பாடலாகப் பாடிக்கொண்டுவிடியவிடிய இவ்ஆட்டம் ஆடப்படும். தேவதுந்தமி, சேவைப் பலகை,சேமக்கலம் ஆகிய இசைக்கருவிகள் ஆட்டத்தின் போதுபயன்படுத்தப் படும். சேவையாட்டக் கோமாளி பாடலைப்பாடி ஆட்டத்தைத் தொடங்க, ஏனைய ஆட்டக்காரர்கள் பின்பாட்டுப்பாடிவட்டமாக ஆடி வருவர். திருமால், பெருமாள், ரெங்கநாதர்ஆகிய தெய்வங்களின் வழிபாட்டில் சேவையாட்டம் தவறாது இடம்பெறுகிறது. [[1]]

 பெருமாள் கோவில்

தென் தமிழகம் மற்றும் கொங்கு நாடு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் இவ்வாட்டம் நடைபெறும் . சங்ககால நூல்களில் குறிப்பிடும் பிந்தேறு குருவை எனப்படும் ஆட்டதுக்கு சமமானதாக கருதபடுகிறது . தேவராட்டம் ஆடும் மக்கள் கடைசியாக இந்த சேவையாட்டம் ஆடுவார்கள் .இந்த ஆட்டத்தை ஆடுவதன் மூலம் தேவராட்டம் முழுமை பெறுகிறது என்பதை அறியலாம் .

வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் சேவையாட்டம் புகழ் பெற்றது . தெலுங்கு மொழியில் , தமிழ் மொழியில் பாட்டுகளை பாடி கொண்டு ஒருவர் இருப்பார் , உறுமி மேளம் இசைக்கும் , ராகத்தோடு பாடல் பாடும் பொழுது நையாண்டி வேஷம் போட்ட ஒருவர் சுற்றி சுற்றி வந்து ஆடுவார் . ராஜகம்பளம் மக்கள் நடத்தும் சடங்கு , திருவிழா , திருமணம் போன்ற நிகழ்சிகளில் தவறாமல் இவ்வாட்டம் நடைபெறும் . வீரபாண்டிய கட்டபொம்மன் குரு பூஜையில் சேவையாட்டம், தேவராட்டம் முக்கிய நிகழ்வாக ஆடபடுகிறது

விருப்பாச்சி கோபால நாயக்கர்http://tawp.in/r/2jl9

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
"'கோபால நாயக்கர் "' தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் படை திரட்டி கூட்டமைப்பு செய்து போரிட்ட மன்னர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர். . இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள விருபாக்ஷி என்னும் ஊரினை ஆட்சி செய்த குறுநில மன்னர் .
ஆங்கிலேயரை எதிர்த்து படை திரட்டி புரட்சி செய்த காரணத்தால் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1800, இல் இவர் தூக்கில் இடபட்டார்.. இவரது நினைவாலயம் விருபாக்ஷி பகுதியில் அமைந்துள்ளது.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] வாழ்கை குறிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி க்கு பக்கத்தில் உள்ள விருபாக்ஷி என்னும் ஊரில் கி.பி.1765 இல் ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்த்த வீரையா நாயக்கருக்கும் , காமாட்சி அம்மாளுக்கும் மகனாக பிறக்கிறார் திருமலை கோபால சின்னப்பா நாயக்கர் . விசுவநாத நாயக்கர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பாளையபட்டுகளில் விருபாக்ஷயும் ஒன்று , 19 வது பாளையக்காரராக இவர் ஆட்சிக்கு வருகிறார் .

[தொகு] கூட்டமைப்பு

திப்பு சுல்தான் படைத் துணையுடன் கோபாலநாயக்கர் கண்காணிப்பில் புரட்சிக்காரர்கள் ஆங்கில முகாம்களில் பாய்ந்து ஆயுதங்களையும் சேமிப்பு பண்டங்களையும் பறித்தனர். விருப்பாட்சி பாளையக்காரராக விளங்கியவர் கோபால நாயக்கர். மருதபாண்டியருடனும் அண்டை தேசத்து துண்டாசியுடனும் தொடர்பு கொண்டு ஒரு விரிவான கூட்டமைப்புடன் தென்னக கூட்டினை உருவாக்கினார். மருதபாண்டியன் தலைமையில் இராமநாதபுரம் சீமையானது. கோபால நாயக்கர் தலைமையில் திண்டுக்கல்லும் கூட்டிணைவுகளுடன் சேர்ந்து வலுப்பெற்றன. கன்னட தேசத்தில் தூண்டாசியும் கிருட்டிணப்ப நாயக்கரும், மலபாரில் கேரளவர்மனும் புரட்சித்தலைவர்களாக உருவாகி கூட்டிணைப்பு மூலம் ஆங்கிலேயரை எதிர்த்தனர். கோயம்புத்தூரிலும் சேலத்திலும் தேபக்தர்கள் இயங்கினர். ஈரோட்டு மூதார் சின்னனும், கானி சாகனும் தலைவர்களாகத் திகழ்ந்தார்கள். மணப்பாறை லக்ஷ்மி நாயக்கரும் , தேவதானப்பட்டி பூசாரி நாயக்கரும் தனது போர் வீரர்களை கோபால நாயக்கருக்கு கொடுத்து உதவி வந்து உள்ளனர் . பழனியில் இத்தலைவர்களின் தூதர்கள் கோபால நாயக்கர் தலைமையில் கூடிப் பேசினார்கள். விருப்பாட்சியில் தெற்கத்திச் சீமையின் சுமார் 3000 கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி வெள்ளையர்களை விரட்டுவதற்குச் சபதம் எடுத்தார்கள். இந்த அறைகூவல் கிராமங்கள் தோறும் பனையோலை மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. தீபகற்பக் கூட்டிணைவு உருவாகியது. மக்கள் திரள் பங்கேற்ற முதல் சுதந்திரப்போர் தொடங்கியது!

[தொகு] ஆங்கிலேயரை எதிர்த்தார்

சுதந்திர போராட்ட வீரரும், விருப்பாச்சி குறுநில மன்னருமான கோபாலநாயக்கர் என அழைக்கப்பட்ட திருமலை கோபால சின்னப்ப நாயக்கர் விருப்பாச்சி பாளையப்பட்டை 19வது பாளையக்காரராக ஆட்சி புரிந்து வந்தார். இவர் ஆட்சிக் காலத்தில், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார். ராணி வேலுநாச்சியாருக்கும், ஊமைத்துரைக்கும் அடைக்கலம் கொடுத்ததால் வெள்ளையர்கள், கோபால நாயக்கர் மீது ஆத்திரம் அடைந்தனர். இந்நிலையில், கி.பி.1800ல் வெள்ளையர்களை எதிர்த்து ஒரு அணி திரட்டி கோவை மீது படையெடுத்துச் சென்றார். இப்போரில் வெள்ளையர்கள், விருப்பாச்சி நாயக்கரை கைது செய்து தூக்கிலிட்டனர். இவரது அரண்மனையையும் தரைமட்டமாக்கினர்.அவருடன் அவரின் மகன் முத்து வெள்ளையா நாயக்கரும் தூக்கில் இடபட்டார் . இவருடன் இவரின் படையில் இருந்த பலரும் ஆங்கிலேயரின் துப்பாக்கி சூட்டில் மாண்டனர் .

[தொகு] கள ஆய்வு

கோபால நாயக்கர் வாழ்ந்த விருப்பாச்சி பகுதியில் அரசின் சார்பில் கள ஆய்வு மேற்கொண்டு, அரண்மனை வளாக அமைவிடம் கண்டறியப்பட்டது. கள ஆய்வில் அரண்மனையின் எச்சங்கள், ஐந்து ஏக்கர் பரப்பளவில் பரவிக் கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், கோவிலின் சிதிலங்கள், பயன்படுத்திய மண் பாண்டங்கள், பீங்கான்கள், கண்ணாடியால் ஆன பொருட்கள் ஆய்வில் சேகரிக்கப்பட்டன. இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்ததற்கான தடயங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த ஆயுதங்களை வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்பது கள ஆய்வின் மூலம் அறியப்படுகிறது.

[தொகு] நினைவிடம்

ஆங்கிலேயர்களை எதிர்க்க திண்டுக்கலில் இருந்து கூட்டமைப்பு திரட்டி , ராணி வேலுநாசியார்க்கும், ஊமைதுரைக்கும் போராட்ட காலத்தில் உதவி வந்தும் படை வீரர்களை அவர்களுக்கு கொடுத்து உதவியும் , கேரளா வர்மா , துன்டூஜி , திப்பு சுல்தான் என்று பலரிடமும் இணக்கத்தோடு இருந்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் பாடுபட்ட திருமலை கோபால சின்னப்பா நாயக்கருக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டி உள்ளனர் .திண்டுக்கல் - பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மணிமண்டபம் 69 லட்சம் செலவில் 242 ச.கி.மி. பரபளவில் அரசு அமைத்துள்ளது

வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில்http://tawp.in/r/2aa3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சென்றாயப் பெருமாள் கோயில் முகப்பு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுக்கு அருகிலுள்ளது பழைய வத்தலக்குண்டு. இங்குள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது சென்றாயப் பெருமாள் கோயில். இந்த சென்றாயப் பெருமாள் கோயிலில் ராஜகம்பளத்து நாயக்கர் சாதியைச் சேர்ந்தவர்கள் பூஜை செய்யும் பணியைச் செய்து வருகின்றனர். இங்கு பூஜை செய்யும் பூசாரிகள் குறி சொல்லும் நிகழ்வும் நடைபெறுகிறது.

[தொகு] தல வரலாறு

சுமார் 405 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் பசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஆதி சென்னம நாயக்கர், ஒருநாள் தனது பசு மாடுகளில் ஒன்றைக் காணாமல் தேடியிருக்கிறார். அந்தப் பசு மாட்டைத் தேடி மலையின் உச்சிப்பகுதிக்குச் சென்று பார்த்த போது, அங்கு அந்தப் பசு பாலகன் ஒருவனுக்குப் பால் தந்து கொண்டிருந்திருக்கிறது. மலைப்பகுதிக்குப் பாலகன் எப்படி வந்தான் என்று அவர் சிந்தித்த நிலையில் அவர் கண் முன் பெருமாள் தோன்றி, இந்த மலைப்பகுதியில் கோயில் கட்டி வழிபாடு செய்து வந்தால் இந்தப் பகுதி மக்களுக்கும், இங்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கும் அவர்கள் வேண்டியது கிடைக்கும் என்றும், இவர்கள் குடும்பத்தினர் இக்கோயிலில் பக்தர்களுக்குச் சொல்லும் அருள் வாக்குகள் அனைத்தும் நிறைவேறும் என்றும் சொல்லி மறைந்திருக்கிறார். அன்றிலிருந்து ஆதிசென்னம நாயக்கர் வாரிசுதாரர்கள் இந்தக் கோயிலை அமைத்து பூசை மற்றும் சிறப்பு வழிபாடுகளைச் செய்து வருகின்றனர்.
சென்றாயப் பெருமாள் கோயிலுக்கான மலைப்பாதை

[தொகு] அறங்காவலர்கள்

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறயின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் பரம்பரை அறங்காவலர்களாக சென்னம நாயக்கரின் மரபுரிமையாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கண்ணன் பூசாரி எனும் சென்னம நாயக்கர், செல்வராஜ், ராஜ் ஆகியோர் உள்ளனர்.

ராஜகம்பளத்து நாயக்கர்கள் வணங்கும் கோவில்கள்

குறைவிலாதருளும் குச்சனூர் பகவான்

ராஜகம்பளத்து மக்களுக்கு மரியாதை செய்து தான் கோவில் கொடிமரம் ஏற்றப்படும் கோவில்கள் தமிழகத்தில் பல உள்ளன அவற்றில் தேனீ மாவட்டம் குச்சனூர் சநீஸ்வரபகவான் கோவில்
அழகான செழிப்பான தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது.

[Gal1]

இந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் இடம் குச்சனூர்தான்.
[kuchanur.jpg]


சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும். மேலும் தாங்கள் துவங்கும் புதிய தொழில்கள் வளர்ச்சி அடையவும், வணிகங்கள் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.



 தற்போது இந்தியாவின் பிற பகுதிகளிலிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் போன்ற வெளிநாட்டிலிருந்தும் இந்துமத நம்பிக்கையுடையவர்கள் இந்த சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து தங்கள் குறைகள் தீர்ந்திட வேண்டிச் சென்று கொண்டிருக்கின்றனர்.



குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மனைவி மைத்ரேயா அங்கு எருமைக் கன்றுடன் கோவிலை 19 முறை வலம் வந்து, அதை தானமாக வழங்கினார். பின்னர், 19 வகையான விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்தார். பின், கோவிலில் நடந்த உச்சிகால பூஜையில் கலந்து கொண்டார். 

   General India news in detail

தல வரலாறு

இப்பகுதியை சேர்ந்த தினகரன் எனும் மன்னன் ஒருவன் குழந்தையின்றி மனம் வாடிவந்த நிலையில் தனக்குக் குழந்தை ஒன்று அளிக்கக் கோரி தினமும் இறைவனிடம் வேண்டி வந்தான். இப்படி அவன் வேண்டிக் கொண்டிருந்த போது ஒருநாள் அசரீரி ஒன்று கேட்டது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும் அவனை வளர்த்து வர வேண்டும் என்றும் அதன் பின்பு அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. அந்த அசரீரியில் கூறப்பட்டபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் வந்தான். அந்த மன்னனும் அந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். அதன் பின்பு அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மன்னனும், அரசியும் அந்தக் குழந்தைக்கு சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். மன்னனும் அவனுடைய அறிவுத்திறனுக்கு அவனை மன்னனாக்குவதே சரி என்கிற எண்ணத்துடன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனுக்கே முடிசூட்டினான்.

இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு சனி தோசம் பிடித்தது. சனி தோசத்தால் தினகரன் பல சோதனைகளுக்கு ஆளானான். மிகவும் துன்பமடைந்தான். தன்னை வளர்த்து மன்னனாகவும் ஆக்கிய தனது வளர்ப்புத் தந்தை அடையும் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால் சனியின் உருவத்தைப் படைத்து தனது தந்தைக்கு வரும் துன்பத்தை நீக்க வேண்டி வழிபடத் துவங்கினான்.

இவனது வழிபாட்டில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றினார். அவர், "முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப இந்தப் பிறவியில் சனி தோசம் பிடிக்கிறது. அவர்களுடைய பாவ வினைகளுக்கேற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு அவர்களது நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும். உன் தந்தையின் முற்பிறவி பாவ வினைகளுக்குத் தகுந்தபடி அவருக்குத் துன்பங்கள் வருகின்றன." என்றார்.

சந்திரவதனன் அனாதையாக அந்த வீட்டிற்கு வந்த தன்னை வளர்த்ததுடன் வளர்ப்பு மகனான தன்னை இந்த நாட்டின் மன்னனாகவும் ஆக்கிய அவருக்குக் கொடுக்கும் துனபங்களைத் தனக்கு அளித்து அவருடைய துன்பத்தைக் குறைக்கும்படி வேண்டினான். அவனுடைய வேண்டுதலில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழரை நாழிகைக் காலம் சனி தோசம் பிடிக்கும் என்றும் அந்த ஏழரை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் அதற்கு சம்மதித்தான்.

சனீஸ்வர பகவானும் அதற்கு ஒப்புக் கொண்டு ஏழரை நாழிகை காலத்திற்கு சந்திரவதனனுக்குக் கடுமையான பல துன்பங்களைக் கொடுத்தார். அத் துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதனனின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான் "இந்த ஏழரை நாழிகை கால சனிதோசம் கூட உன் முற்பிறவியின் வினைகளுக்கேற்ப உனக்கு வந்தது. தங்கள் குறைகளை உணர்ந்து இவ்விடத்திற்கு வந்து என்னை வணங்கும் எவருக்கும் சனி தோசத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன்" என்று சொல்லி மறைந்தார். பின்பு அந்த இடத்தில் சுயம்புவாகத் தோன்றினார்.

சுயம்பு வடிவிலான சனீஸ்வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சந்திரவதனன் தன்னுடைய வழிபாடு, சனி தோசம் பிடித்து அதனால் துன்பப்படும் பிறருக்கும் வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்,  அந்த செண்பகநல்லூரில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற்குக் குச்சுப்புல்லினால் கூரை அமைத்து வழிபாட்டுத் தலமாக்கினான். இதன்பிறகு இந்த செண்பகநல்லூர் குச்சனூர் என்று ஆகிவிட்டது.  "தினகரன் மான்மியம்" என்கிற பெயரில் வெளியான பழமையான நூலில் இந்த தலத்திற்கான வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
[sani.jpg]
வழிபாடுகளும் சிறப்புகளும்
சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் "விடத்தை மரம்" தல மரமாகவும், "கருங்குவளை மலர்" தல மலராகவும், "வன்னி இலை" தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு "காகம்" வாகனமாகவும், "எள்" தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன் காகத்திற்கும் அன்னமிட்டு வழிபடுகின்றனர்.

[Gal1]
அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இந்த தலம் சனிஸ்வர பகவானுக்கு பிரம்மஹத்தி தோசம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் என்றும் கூறப்படுகிறது.
[Gal1]

குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் "ஆடிப் பெருந்திருவிழா" என்கிற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


  இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் "சனிப்பெயர்ச்சித் திருவிழா" சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாக்களின் போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.
இக்கோவிலில் துணைத் தெய்வங்களாக அருள்மிகு சோணைக் கருப்பண சுவாமி, அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்.


 தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயில் வளாகத்தில் வலது புறத்தில் சோணை கருப்பணசுவாமி காவல் தெய்வமாக உள்ளதால் அதற்கு ஒரு நாள் தனி திருவிழாவே நடத்தப்படுகிறது. கோயிலில் 8 அடி உயரத்தில் குதிரை மேல் கருப்பசாமி அரிவாளுடன் அமர்ந்திருக்கும் சிலை உள்ளது. இந்த சிலைக்கு கீழ் 5 அங்குல சுற்றளவுள்ள ஒரு ஓட்டை உள்ளது. பக்தர்கள் வழங்கும் மது இதில் ஊற்றப்படும். ஆண்டு தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பிலும் குறிப்பிட்ட அளவு (100 குவாட்டர்) மது வாங்கப்படும்.



குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன்  துவங்கி பூலாநந்தபுரம் ராஜகம்பள மாறைய நாயக்கர் உறவின் முறையால் கொடிக்கம்பத்திற்கு நீர் ஊற்றப்பட்ட பின், காலை காக்கை சகுனம் பார்த்து கொடியேற்றத்துடன் விழா துவங்கி சனிக்கிழமைகளில் விழா நடக்கும். சிறப்பு பூஜை,  திருக்கல்யாணம்,  மூன்றாவது சனி வாரம் ஆடி பெருத்திருவிழா கொண்டாடப்படும்.  சிறப்பு பூஜை, சுவாமி புறப்பாடு,  லாட சித்தர் பீடத்தில் பூஜை, முளைப்பாரி, கரகம் கலக்குதல், மஞ்சள் நீராட்டம்,  சோனைக்கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்தல், கொடியிறக்கி பகவானுக்கு விசேஷ பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கும். ராஜகம்பளம் மக்களுக்கு கோவில்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களே கோவிலில் முதலில் பூஜை செய்வர் .


 சனிபகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம். சனிபகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுதல் மிகவும் சிறப்பு.




[Gal1]



[Gal1]






பயண வசதி

தேனி நகரிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் குச்சனூர் ஊருக்கு தேனியிலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் நகரப் பேருந்து வசதி  இருக்கிறது. திருவிழாக்களின் போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தினால் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

கோடங்கி நாயக்கர்கள்

கோடங்கிகள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்றும் குறி சொல்வதும் நல்ல
நேரம் பார்த்து சொல்வதும் இவர்களில் சிலரது தொழிலாக இருக்கின்றது.  எட்டயபுர
மன்னர்களின் குலதெய்வ வழிபாடு, சடங்குகள் பற்றி  Etaiyapuram Past and Present
இவ்வாறு கூறுகின்றது.




"Though they outwardly profess to be of the Vaishnava faith, their religion
may be described as a kind of fetichism or demonism. Each family has its
household deity or fetish which is instituted by the consecretion of some
relics of departed relatives, more especially, of women who have performed
sati; or of those who have led reputedly chaste and continent lives or have
died virgins, to whom their first prayers and devotions are made, of divine
dispensers of health, happiness, and prosperity.
They never consult a Brahmin for any purpose and are spiritually guided by
Gurus of their own caste, styled Kodangki Nayakans, who have the reputation
of being well versed in astrology and demonology. " (Page 6)
"Saka-Devi is the chief household goddess worshipped by the Kambalatars. She
has no temples, and is represented by no form or image, but is worshipped in
an enclosure fenced in by branches of the Elandai tree (Zizyphus Jujuba)"
(Page 9)




ஜக்கம்மாள் என்றழைக்கப்படும் தெய்வமே எட்டயபுர அரச வம்சத்தினரின் குலதெய்வம்.
எட்டயபுர அரண்மனையின் வாசல் பகுதியில் வலது பக்கத்தில் ஒரு சிறிய ஆலயமும்
இருக்கின்றது. இன்றளவும் இங்கு பூஜை தினமும் நடைபெற்று வருகின்றது.  அதோடு
எட்டயபுர அரச வம்சத்தினர் முருக பக்தர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
கழுகுமலையில் சுப்ரமணிய சுவாமிக்குக் கோயில் கட்டியமை அக்கோயிலின்
பராமரிப்புக்கு அரச வம்சத்தினரால் தொடர்ந்து அளிக்கப்பட்ட கொடைகள் போன்றவை
இதற்குச் சான்று எனலாம். அதோடு அரண்மனை பூஜையறையில் முருக தெய்வத்தின் பல
 படங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகின்றன.



எட்டயபுரத்தில் பாரதியார் இல்லத்திற்கு எதிரே இருக்கும் பெருமாள் கோயில் 28ம்
பட்டமாகிய எட்டயபுர மன்னர் கண்கொடுத்த ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்ப நாயக்கர்
அவர்களால் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த மன்னர் பெயரால்
கடிகைமுத்து புலவர்  சமுத்திரவிலாசப்பிரபந்தம்,  காமரச மஞ்சரிப்பிரபந்தம் ஆகிய
இரண்டு பிரபந்தங்களை இயற்றியிருக்கின்றார். அதனை வம்சமணி தீபிகை இப்படி
கூறுகின்றது.




"மேற்படி பிரபுக்கள் பேரில் கடிகைமுத்துப் புலவரவர்களாற்
சமுத்திரவிலாசப்பிரபந்தமும் காம ரச மஞ்சரிப் பிரபந்தமுஞ் செய்து சபையிற்
பிரசங்கஞ்செய்யப்பட்டதை ஆதரடவுடன் கேட்டு மேல்படி பிரபுக்களாலே உயர்ந்த
சம்மானங்கள் செய்யப்பட்டன. மேற்படி பிரபந்தம் இரண்டுகளில்
சமுத்திரவிலாசப்பிரபந்தமானது சிலேடை யமகம் பாவ புஷ்டிமுதலான குணங்களால் தமிழ்
பண்டிதர்களாலே பிரவுடப்பிரபந்தமாக ஒப்புக் கொள்ளப்பட்டு இச்சென்னைப்
பிரதேசங்களில் இப்பவும்வழங்கிவருகின்றது..." (பக்கம் 38)




எட்டயபுர அரசர்களுக்குக் குருவாக இருந்தவர்கள் கோடங்கி நாயக்கர்கள்
எனப்படுபவர்கள்.  இவர்களும் கம்பளத்து நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர்களே.
சோதிடம், மாந்திரிகம் போன்ற கலைகளில் திறமை மிக்கவர்களாக
இருந்திருக்கின்றார்கள். இந்தக் கோடங்கி நாயக்கர்கள் முன்னிலையில் தான்
திருமண வைபவங்கள்
நிகழ்ந்திருக்கின்றன. திருமணம் மட்டுமல்ல,
இறப்பு சடங்குகள், கிரியைகள் ஆகியற்றோடு ஒரு குருவின்
அனைத்து கடமைகளையும்   நிறைவேற்றுபவர்களாக இவர்கள் இருந்திருக்கின்றனர்.
 


இவர்கள் அக்காலத்தில் அரச குடும்பத்தினரால் மிகவும் உயர்ந்த நிலையில்
ஸ்தானத்தில் வைக்கப்பட்டு சிறப்பு மரியாதைகளுடன் போற்றப்பட்டுள்ளனர்.
முன்னர், கம்பள நாயக்கர்களின் துணைவியர் கணவரை இழக்க நேரிட்டால்
சதி வழக்கத்தில் ஈடுபட்டு தம் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இவ்வகையில் உயிர்
நீத்தவர்கள் இந்த வம்சத்தினரின் ஏனையோரால் குலதெய்வங்களாக வழிபடப்பட்டு
வந்துள்ளனர்.  சதி வழக்கப்படி உயிரை மாய்த்துக் கொள்ளும் பெண்களை தேவதைகளாக
வைத்து அவர்களுக்குக் கோயில் கட்டும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. இவ்வகை
கோயில்களை "தீப்பாஞ்சான் கோயில்" என்று அழைக்கின்றனர்.
எட்டயபுர அரச வம்சத்தினரின் திருமணம் தனித்தன்மை வாய்ந்ததாக
சித்தரிக்கப்படுகின்றது.  திருமண வைபவம் கோடங்கி நாயக்கர்களால் உறுதி
செய்யப்பட்டு முறையாக இவர்களால் அறிவிக்கப்படுமாம். கிராமத்திற்கு
வெளிப்புறத்தில் இரண்டு குடில்கள் அமைத்து அவற்றை அவரைக் கொடி, பொங்கு மரத்தின்
கிளைகளால அழகு செய்வார்களாம்.  இந்தக் குடில்களில் மணமகளும் மணமகனும் இருக்க,
கோடங்கி வருகை புரிந்திருக்கும் விருந்தினர்களையும் உறவினர்களையும் உபசரித்து
வரவேற்பாராம்.  உருமி மேளத்துடன் சீர்வரிசைகள் மணமகள் இல்லத்திற்கு கொண்டு
வரப்படுமாம்.  பின்னர்  கோடங்கி மணமகனிடமிருந்து மஞ்சள் கயிற்றில் இணைக்கப்பட்ட
தங்க பொட்டு ஒன்றை பெற்றுக் கொண்டு அதனை மணமகனின் சகோதரியிடம் கொடுக்க அந்தப்
பொட்டு இணைத்த மஞ்சள் கயிற்றை மணமகனின் சகோதரி மணமகள் கழுத்தில்
கட்டுவார்களாம். இந்த திருமண வைபவம் ஒரு வாரம் தொடர்ந்து விருந்துகள் மற்றும்
உபசரிப்புகளோடு நடைபெறுவது என்பதும் தெரியவருகின்றது.